search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண் பிணம்"

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பக்கிரிபாளையம் புறவழிச் சாலைஅருகில் உள்ள தூங்கு மூஞ்சி மரத்தில் அடையாளம் தெரியாத ஆண் தூக்கில் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தூக்கில் பிணமாக தூங்கியவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? இவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டிபன் ஜேசுபாதம் தலைமையில் போலீசார் வனப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.
    • அவர் யார்? எந்த ஊரை ேசர்ந்தவர் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே சந்தை பேட்டை வனப்பகுதியில் அடையாளம் ெதரியாத ஆண் பிணம் கிடந்தது. இதனை அந்த வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டிபன் ஜேசுபாதம் தலைமையில் போலீசார் வனப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    அங்கு ஆண் பிணம் சுமார் 50 வயது மதிக்கதக்க இருக்கும். அவரின் முகம் சிதைந்த நிலையில் உள்ளது. அதனால் அவர் யார்? எந்த ஊரை ேசர்ந்தவர் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்றின் கரையோரம் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 53). பெயிண்டர். இவர் பெயிண்டிங் வேலை இல்லாத சமயத்தில் அப்பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் கரையோரம் மீன் பிடிக்க செல்வது வழக்கம். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது. சம்பவத்தன்று வழக்கம் போல் மீன் பிடிக்க அங்காளன்குப்பம் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் மிதந்து கிடந்தார். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த நிலையில் இருந்த பிலவேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜேந்திரன்(வயது 47) கோணி தைக்கும் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருப்பதால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் .
    • இன்று ராஜேந்திரன் அமர்ந்திருந்த கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரோஷனை பகுதியில் உள்ள ஆலன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 47) கோணி தைக்கும் தொழில் செய்து வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து புதுச்சேரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்பு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், ராஜேந்திரன் அதே பகுதியில் உள்ள கிணறு ஒன்றின் அருகில் அமர்ந்து இருப்பதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் பார்த்துள்ளனர் . பின்பு மீண்டும் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருப்பதால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் .

    இந்நிலையில் இன்று ராஜேந்திரன் அமர்ந்திருந்த கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த ரோஷனை போலீசார் சம்பவ இடத்திறக்கு நேரில் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • பல்லடம் போலீஸ் நிலையத்தல் தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் கடந்த 23 ந்தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்ததாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. அவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள்,பல்லடம் போலீசாரை 9498101343,என்ற எண்ணிலோ,அல்லது பல்லடம் போலீஸ் நிலையத்தை அணுகி தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பஸ் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்துள்ளார்.
    • யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதளமாகும்.

    இங்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்துள்ளார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பென்னாகரம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒரே வாரத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் ஒகேனக்கலில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

    • விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் 4 வழி புறச்சாலை உள்ளது. அங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்,
    • அடையாளம் தெரியாமல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் 4 வழி புறச்சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள ஆவின் பாலகம் அருகில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு ஏராளமான மரங்களும், முட்புதர்களும் உள்ளன.இப்பகுதியில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்குள் பொது மக்கள் சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அடையாளம் தெரியாமல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூக்கில் தொங்கியவர் யார்? இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுனரா என்பது போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புளிய மரம் ஒன்றில் ஆண் ஒருவர் கயிற்றில் பிணமாக தொங்கினார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பெத்தூர் காட்டு மாரியம்மன் கோவில் வனப்பகுதியில் வனக்காப்பாளர் ஆனந்த் ரோந்து சென்றார்.

    அப்போது அந்த வனப்பகுதியில் உள்ள புளிய மரம் ஒன்றில் ஆண் ஒருவர் கயிற்றில் பிணமாக தொங்கினார். இது குறித்து ஆனந்த் அரூர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக தொங்கியவருக்கு சுமார் 65 முதல் 70 வயதிற்குள் இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண் இறந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது.
    • பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகர பேருந்துகள் நிற்கும் பஸ் நிலையத்தில் பென்னாகரம் பேருந்து நிற்கும் இடத்தில் ஆண் ஒருவர் மயங்கி கிடப்பதாக நகர போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், போலீசார் ராஜேஷ்கண்ணன், குமார் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

    அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் இறந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆம்புலன்சை வரவழைத்த போலீசார் அவர்களே அந்த ஆண் உடலை தூக்கி ஏற்றி பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எவ்வாறு உயிரிழந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்பெண்னை ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது.அங்கே, அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
    • நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர்,

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் தென் பெண்ணையாறு உள்ளது. ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்த போது அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.

    இத்தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டு ஆற்றில் கரையோரம் தூக்கி வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • பொதுமக்கள் காங்கயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே மடவிளாகம், நந்தவனக்காடு பகுதியில் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காங்கயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீசாா், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவருக்கு சுமாா் 60 வயது இருக்கும் எனவும், பெயா், முகவரி போன்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • சேலத்தில் 2 இடங்களில் ஆண் பிணங்கள் மீட்கப்பட்டன.
    • பிணமாக கிடந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் டவுன் பஸ் நிலையத்துக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இது பற்றி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து இடத்தை கைப்பற்றி பிரேத சோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் கம்பி வேலி அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடல் அழுகி காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த முதியவர் பெயர் மற்றும் ஊர் விபரங்கள் குறித்து விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது பற்றி பெரியேரி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த முதியவர் பற்றி தகவல் கிடைத்தால் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×